IPL லீக் திருவிழா: CSK vs KKR தொடக்க ஆட்டத்தில் அறிமுகமாகும் 5 புதிய வீரர்கள்? முழு விவரம் இதோ!
இன்னும் 3 நாட்களில் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் CSK மற்றும் KKR அணி சார்பில் அறிமுகமாக வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள 5 புதிய வீரர்கள் பற்றிய முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
புதிய வீரர்கள்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளின் 15வது சீசன் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே மீதமிருக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் இது பற்றிய பேச்சுக்கள் தான் அடிபட்டு வருகிறது. இந்த முறை IPL போட்டிகளில் 2 புதிய அணிகள் இணைந்திருக்க, மற்ற அணிகளில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக பல அணிகளில் புதிய, இளம் வீரர்களின் அணி வகுப்புகளை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் IPL 2022ன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக களமிறங்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் பல புதிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஜெர்சி வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!
இப்போது மார்ச் 26 அன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை அணியின் மொயீன் அலி, தீபக் சாஹர் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகிய மூன்று முன்னணி வீரர்களின் சேவையை இழந்துள்ளது. இதனால் CSK அணி ஒரு தற்காலிக ப்ளேயிங் XI ஐ அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்பதால் முதல் ஆட்டத்தில் புதுமுகங்கள் அறிமுகத்திற்கு வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், KKR ஒரு திடமான அணியை தயாராக வைத்திருக்கும் வேளையில், அணி நிர்வாகம் சில அம்சங்களை கண்டுபிடித்து, ஒரு அறிமுக ஆட்டக்காரருக்கு பாதையை திறக்கவும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் CSK vs KKR போட்டியில் அறிமுகமாகக்கூடிய 5 வீரர்களை பற்றி இப்போது பார்ப்போம்.
அனுகுல் ராய் (KKR)
ஐபிஎல் 2018 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தாலும், அனுகுல் ராய் தனது ஐபிஎல் அறிமுகத்தை இன்னும் துவங்கவில்லை. இப்போது KKR அணியில் இடம்பிடித்துள்ள அனுகுல், வருண் சக்ரவர்த்திக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்க முடியும். மேலும் ஆர்டரைக் குறைக்கும் ஒரு எளிய பேட்டராகவும் அவர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (CSK)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மெகா ஏலத்தில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டார். பேட் மற்றும் பந்து என இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இந்த சீசனின் பெரும்பகுதியை இழக்க இருக்கும் தீபக் சாஹருக்கு சிறந்த மாற்றாக இருக்கலாம்.
IPL 2022 CSK vs KKR: தொடக்க போட்டியில் கவனிக்க வேண்டிய 3 முக்கிய வீரர்களின் ஆட்டம்!
ஹரி நிஷாந்த் (CSK)
நிஷாந்த் TNPL 2021 இல் ஒன்பது போட்டிகளில் விளையாடி 368 ரன்களுடன் அதிக ஸ்கோர் பெற்ற ஒரு சிறந்த வீரர் ஆவார். அதனால் IPL 2022 ஏலத்தில் அவரது அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு CSK அணிக்கு சொந்தமாகி இருக்கிறார். அவர் நீண்ட காலமாக தமிழ்நாடு உள்நாட்டு வட்டாரத்தில் விளையாடும் ஒரு தொடக்க பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரி நிஷாந்த் இதற்கு முன்பு 2020ம் ஆண்டின் IPL பதிப்பில் CSK அணியில் இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு போட்டி கூட வழங்கப்படவில்லை.
அபிஜீத் தோமர் (KKR)
ராஜஸ்தானை சேர்ந்த அபிஜீத் தோமர் ஒரு பவரான ஹிட்டர் ஆவார். அவர் பேட்டிங் வரிசையில் மிகவும் நெகிழ்வானவர். தவிர, வரிசையில் எங்கு வேண்டுமானாலும் இவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பதால் இவருக்கு இந்த சீசனில் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
அசோக் சர்மா (KKR)
உமேஷ் யாதவ் அணியில் இருந்தாலும் KKRன் பந்துவீச்சுக் குழு சற்று அனுபவமற்றதாகவே தெரிகிறது. அதனால் அசோக் ஷர்மா முதல் ஆட்டத்தில் கவனிக்கப்படக்கூடிய மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் கண்ணியமாக பேட்டிங் செய்யக்கூடிய அசோக் சர்மாவை KKR அணி 55 லட்சத்துக்கு ஏலத்தில் சொந்தமாக்கியது.