தமிழகத்தில் வங்கி பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை – IBPS வெளியிட்ட அறிவிப்பு!
வங்கிகளில் எழுத்தர் பணியிடத்திற்கு மாநிலத்தின் அலுவல் மொழி கட்டாயமாக்கப்பட்டது. இதனை தற்போது ஐபிபிஎஸ் என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஜி.கருணாநிதி கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.
வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் வங்கி தேர்வுகளில் மாநில அலுவலக மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழ் மொழி கட்டாயமில்லை என்று வங்கி தேர்வு நடத்தும் ஐபிபிஎஸ் என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக தேர்வர்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 843 பணியாளர்களில் சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த அறிவிப்பு தமிழக தேர்வர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
TNPSC Group 2, 2A தேர்வு எழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – மைனஸ் மதிப்பெண் உண்டு!
மேலும் இது குறித்து அகில இந்திய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலர் ஜி.கருணாநிதி கூறியதாவது, தமிழகத்தில் முன்னதாக வங்கி பணியிடத்தில் 20% முதல் 30% வரையிலான வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வந்தனர். ஆனால் அண்மை காலமாக இந்த எண்ணிக்கை 50% ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கிராமப்புறங்களில் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். இதனால் கிராம மக்களுக்கு வங்கி சேவை பெறுவதில் சிரமமாக உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் கிராமப்புறங்களில் பணியாற்றும் வெளி மாநிலத்தவர்கள் வாடிக்கையாளர்களிடம் தங்களுக்கு தமிழ் தெரியாது என்றும் மற்றொரு வரை அணுகுமாறு கூறுவதாக நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பணியில் சேரும் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொள்ள 3 மாதங்கள் வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த 3 மாதத்திற்குள் கற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படாமல் மீண்டும் 3 மாத காலம் கொடுக்கப்படுகிறது. அத்துடன் 2022-2023ம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் வெளிமாநிலத்தவர்கள் 50% மேற்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டது. அதனால் இது குறித்து இந்திய வங்கிகளின் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.