TNPSC Group 2, 2A தேர்வு எழுத உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – மைனஸ் மதிப்பெண் உண்டு!
குரூப்-2 தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மைனஸ் மதிப்பெண் உண்டு எனவும், எந்த பிழைகள் செய்தால் எவ்வளவு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப்-2:
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 முதலான தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் குரூப் 2 தேர்வு மே 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது மற்றும் குரூப்-2 தகுதித் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போது குரூப் 2 தேர்விற்கு மைனஸ் மதிப்பெண் உண்டு என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு | மதிப்பெண் பட்டியல் விபரங்கள் வெளியீடு!
எதற்கெல்லாம் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வாளர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே விடைத்தாளை வாங்கியதும் அந்த விடைத்தாளில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருப்பின் பயன்படுத்தும் முன்பாகவே மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி தேர்வாளர்கள் தங்களுடைய விடைத்தாளிற்கு பதிலாக வேறு ஒருவரின் விடைத்தாளில் பதிவு எண்ணை எழுதி விட்டால் தேர்வாளர்களின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து 2 மதிப்பெண் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடை குறிப்பை சரியாக ஷேடிங் செய்யாவிட்டாலும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
விடைத்தாளில் புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமல் இருந்தாலும், விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமல் இருந்தாலும் 5 மதிப்பெண் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் விடைத்தாளில் கைரேகை வைக்க தேவையில்லை. மற்ற தேர்வாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கைரேகை வைக்க வேண்டும். கைரேகை சரியாக பதிவாகவில்லை என்றாலும் 2 மதிப்பெண் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த கேள்விக்காவது விடை தெரியாமல் காலியாக விட்டிருந்தாலும் 2 மதிப்பெண் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வாளர்கள் மைனஸ் மதிப்பெண் முறையை கவனத்தில் கொண்டு தேர்வு எழுதும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.