IOCL கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க டிச.27 கடைசி நாள்..!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOCL) ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Trade/ Technician Apprentice போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான முழு விவரங்களையும் கீழே பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IOCL வயது வரம்பு:
இப்பணிக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 24 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
IOCL ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் ஊதியத் தொகை பற்றிய தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்த்து கொள்ளவும்.
IOCL தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் இணைப்பின் வாயிலாக 27.12.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து பயனடையும் படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.