இன்னும் 6 மாதங்களில் கொரோனா முடிவுக்கு வரும் – நோய்த்தடுப்பு மைய இயக்குநர் பேட்டி!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று இன்னும் 6 மாதங்களில் முடிவுக்கு வரும் என நோய் தடுப்புத்துறை மையத்தின் இயக்குநர் சுர்ஜீத் சிங் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிபயங்கரமாக பரவியது. தமிழகத்தில் நோய்த்தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர், ஆசிரியரல்லாத சங்கங்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கும் கொரோனா பாதித்து வருகிறது. இந்நிலையில் இன்னும் 6 மாதத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என நோய் தடுப்புத்துறை மையத்தின் இயக்குநர் சுர்ஜீத் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 30,570 பேருக்கு தொற்று! 431 பேர் பலி!
இது குறித்து அவர் கூறியதாவது, கொரோனா சாதாரண தொற்று நோய்களில் ஒன்று போல ஆகி எளிதாக நிர்வகிக்க கூடிய ஒன்றாகிவிடும். இதுதான் ஒரு பெருந்தொற்று முடிவதன் தொடக்க நிலை என கூறிய அவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை தந்து எளிதாக குணமாக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் 75 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில் பலர் நோய் எதிர்ப்பாற்றலை பெற்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.