தமிழகத்தில் ஆசிரியர், ஆசிரியரல்லாத சங்கங்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 18ம் தேதி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நேரடி கலந்துரையாடல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் அறிவிப்பு:
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பெருந்தொற்று காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் சங்கங்களுடன் வரும் 18ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் நேரடி கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
உலகளவில் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் – பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம்!
இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தமிழக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறையில் வளர்ச்சி சார்ந்த கலந்துரையாடல் செப்டம்பர் 18ம் தேதி சென்னை டிஜிபி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு அரங்கில் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் கலந்துரையாடலில் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், ஆகியோர்களின் சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்கலாம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் கவனத்திற்கு!
மேலும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் கலந்துரையாடலில் தொடக்க கல்வி வட்டார கல்வி , மெட்ரிகுலேசன் பள்ளிகள், ஆறு தேர்வுகள் இயக்கம் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்கலாம். இந்த கலந்துரையாடலில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களில் அதிகபட்சமாக 3 பொறுப்பாளர்களும் பங்கேற்கலாம். அதில் ஒருவர் மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை மூன்று நாட்களுக்கு முன்பே பள்ளிக்கல்வி இயக்குனருக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.