இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 30,570 பேருக்கு தொற்று! 431 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 431 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,570 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட இன்றைய பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,47,325 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மற்றொரு பணியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
செப்.16 முதல் 16 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – கோவை மாவட்ட ஆட்சியர்!
இந்தியாவில் இதுவரை 76,57,17,137 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாத மக்கள் விரைவாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 38,303 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,60,474 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 3,42,923 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.