இந்தியாவில் ஜூலை 31 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு!
நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் தடை காலத்தை வருகிற ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து விமான சேவை இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
விமான சேவை:
இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் நாட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மாநிலங்கள் தோறும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக அனைத்து மாநிலங்களிலும் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது சில மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஹோட்டல்களை விற்கும் உரிமையாளர்கள் – கொரோனா எதிரொலி !!
ஆனால் விமான சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2020 மார்ச் 23 முதல் சர்வதேச விமான சேவை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்போது வரை நாட்டில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத காரணத்தினால் இதன் தடைக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விமான சேவை இயக்குனரகம் ஜூன் 30 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் தற்போது இதன் தடை காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதி – பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவிப்பு!!
அதன்படி ஜூலை 31 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த தடை சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரவும், வெளிநாட்டவர்களை அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.