தமிழகத்தில் ஹோட்டல்களை விற்கும் உரிமையாளர்கள் – கொரோனா எதிரொலி !!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பல ஹோட்டல்கள் வியாபாரம் இல்லாமல் நட்டத்தில் இயங்குவதால் அதன் உரிமையாளர்கள் ஹோட்டல்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக ஹோட்டல்கள்:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ஊரங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. அதனால் மக்கள் வேலையில்லாமல் தங்களின் வாழ்வாதாரம் இழந்தனர். நாடும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தது. கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிறு குறு வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அரசு தடுப்பு பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பி கொண்டிருந்தது.
ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதி – பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவிப்பு!!
அந்த நேரத்தில் மீண்டும் கொரோனா உருமாறிய வைரஸாக பரவ தொடங்கியது. அதனால் மீண்டும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதனால் உணவகங்களில் வியாபாரம் தடைபட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில்கேன்டீன் நடத்துவோர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இந்த வருவாய் இழப்பால் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடத்திக் கொண்டிருக்கும் ஹோட்டல்களை விற்பதற்கு பலர் அணுகுகின்றனர் என கட்டுமானத் துறையின் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஹோட்டல் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய என்று சுமார் 2,000 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகள், கல்லூரிகள், பள்ளிகள் அருகிலிருந்த ஹோட்டல்கள் விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.