ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதி – பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் நோக்கத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி முக்கிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி வங்கிகளில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.
ஏடிஎம் பணம் எடுக்கும் வசதி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி மட்டுமே ஒரு வழியாக உள்ளது. ஊரடங்கு காரணமாக ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்பாடுகள் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இதனால் ஏடிஎம் மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்க பேங்க் ஆஃப் பரோடா வங்கி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை. அதற்கு பதிலாக தங்களது மொபைலில் M-Connect Plus ஆப்பை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 36 காலியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
இந்த ஆப் மூலமாக தினசரி ரூ.5000 வரை பணம் எடுக்கலாம். மேலும் அருகில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளைக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொண்டால் இச்சேவையை பயன்படுத்தலாம். நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கின் பயன்படுத்தினால் நீங்களாகவே ஈசியாக மொபைலில் பதிவு செய்து கொள்ளலாம்.