PF கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு – வட்டி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைப்பு!

0
PF கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு - வட்டி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைப்பு!
PF கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு - வட்டி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைப்பு!
PF கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு – வட்டி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைப்பு!

PF என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2021-222 ஆம் நிதியாண்டிற்கு வழங்கப்படும் வட்டியை 8.1 சதவீதம் குறைத்து வழங்குவதற்க்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. வட்டி விகிதம் 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாகக் குறைத்து உள்ளது.

EPFO வின் அதிரடி முடிவு:

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். இந்த திட்டம் மூலம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அண்மையில் அதன் வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. சமீபத்திய திருத்தத்தின்படி, 2021 முதல் 2022 வரையிலான நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இபிஎப்ஓ வின் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வட்டிக் குறைப்பு முடிவுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகித அளவுக்குக் குறைவாகும். 1977-78 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதே நிலைக்கு தற்போதைய வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தை மனதில் கொண்டு வட்டி விகிதம் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 26!

வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு மத்திய அரசு அதிக வட்டி வழங்கி வந்தது. 2015-16ஆம் ஆண்டில் சந்தாதாரர்களுக்கு அதிகபட்சமாக 8.8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அந்த வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாகவும் பின்னர் 2017-18 ஆம் ஆண்டில் மேலும் குறைத்து 8.55 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. 2018-19 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது மேலும் 2020-21 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும் EPFO இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!