தமிழக அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதையடுத்து தற்போது அரசுப் பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
உபரி ஆசிரியர் பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் ஆசிரியர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை அமைச்சர் தகவல்!
இதில் குறிப்பாக கடந்த மாதம் முதுநிலை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுகால அட்டவணையை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறது.
ஆதார் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
மேலும் இந்த அரசு பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருப்பின் 5 ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல ஆங்கில வழிக் கல்வியில் 15 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் பணியிடமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் உள்ள உபரி பணியிடங்களின் பட்டியலை தயார் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் இயக்குநரகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.