Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள் குறித்த முழு விபரம்!
இந்திய அஞ்சல் துறை வழங்க கூடிய திட்டங்கள் சிறந்த முதலீடு தரும் சேமிப்பு திட்டங்களாக உள்ளது. தற்போது இப்பதிவில் முக்கிய திட்டங்கள் மற்றும் அதன் முழு விவரங்களை காண்போம்.
சேமிப்பு திட்டங்கள்:
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக நல்ல சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் மக்களுக்கு அறிமுகப் படுத்துகின்றது. வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், காப்பீடு திட்டங்கள் என பல வகை திட்டங்கள் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு திட்டங்களும் தனித்தனி விதிமுறைகளையும் கால அளவையும் கொண்டுள்ளது. அதனால் மக்கள் தங்களுக்கு ஏற்ற திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுகின்றனர். கிராமப்புற மக்கள் அதிகம் அஞ்சலக கணக்கு தொடங்குகின்றனர்.
ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – இனி முன்பதிவு இல்லாமலேயே பயணம் செய்யலாம்!
தற்போது, தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 6.8% வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தில் பணத்தை முதலீடு செய்தால், அது சுமார் 10.59 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். அடுத்தாக தபால் அலுவலகத்தின் சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டத்தில் 7.6% வட்டி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 9.47 ஆண்டுகள் ஆகும். தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு (SCSS) தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் உங்கள் பணம் சுமார் 9.73 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
அதே போல தபால் அலுவலகத்தின் 15 ஆண்டு கால பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. அதாவது, இந்த விகிதத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 10.14 ஆண்டுகள் ஆகும். தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் தற்போது 6.6% வட்டியை அளிக்கிறது. இந்த வட்டி விகிதத்தில் பணத்தை முதலீடு செய்தால், அது சுமார் 10.91 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகைக்கு (RD) தற்போது 5.8% வட்டி வழங்கப்படுகிறது. அதனால் இந்த வட்டி விகித பணத்தை முதலீடு செய்தால் இது சுமார் 12.41 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.