ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – இனி முன்பதிவு இல்லாமலேயே பயணம் செய்யலாம்!
அவசரமாக வெளியூர்களுக்கு செல்ல இருக்கும் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் ஒரு அருமையான ஏற்பாட்டை செய்து கொடுத்துள்ளது. அதாவது இனி முன்பதிவு இல்லாமலேயே பிளாட்பார்ம் டிக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
ரயில் சேவை:
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுமே ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த காரணத்தினால் மீண்டும் பழையபடி போக்குவரத்து சேவைகள் அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பேருந்து போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து தான் செலவும் கம்மி என்பதால் பலரும் ரயிலில் தான் செல்ல விரும்புகின்றனர். திடீரென்று பயணம் செய்ய நேரிடும் போது ரயிலில் முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்ய முடியும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுடன் HRA அதிகரிப்பு? கணக்கீடு விவரங்கள் இதோ!
டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே ரயிலில் எப்படி பயணம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். ரயிலில் முன்பதிவு டிக்கெட் பெற முடியாத நேரங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறலாம். பின்பு, டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட்டைப் பெற்று கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், பிளாட்பார்ம் டிக்கெட்டை பெற்றதும் செக்கிங் அதிகாரியை சந்தித்து செல்ல வேண்டிய இடத்திற்கு டிக்கெட் வாங்கிக்கொள்ள வேண்டும்.
ரயிலில் இருக்கை காலியாக இல்லாத போது செக்கிங் அதிகாரி சீட் கொடுக்க மறுக்கலாம். ஆனால், ரயிலில் பயணிப்பதை தடுக்க முடியாது. ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யப்படவில்லை எனில் ரூ.250 அபராதம் செலுத்தி பயணத்தின் மொத்தக் கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். அவசரமாக வெளியூர்களுக்கு செல்ல இருக்கும் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயணிகள் முன்பதிவு இல்லாமலேயே பயணிக்கலாம்.