தமிழகத்தில் 890 தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம் – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள 890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிறப்பு சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை:
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல தனியார் மருத்துவமனைகளில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நோய்யாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டு திட்டம் மூலமாக இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவித்தார்.
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், சென்னையில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையங்களில் 200 படுக்கைகள் காலியாக உள்ளது. இன்னும் கூடுதல் சிகிச்சை மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இலேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறலாம். தேவை இருப்பின் மட்டுமே மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள 890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டு திட்டத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு வெளியே பலகை வைத்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.