‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கதிர் குமரனுக்கு ஏற்பட்ட சோகம் – மீண்டு வந்தது எப்படி? அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிராக கலக்கி வரும் நடிகர் குமரன் தனது பயத்தை போக்க ஒரு மருந்தை உபயோகப்படுத்துவதாக கூறி சில முக்கியமான விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள அந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் குமரன்
சினிமாவில் ஒரு நடிகராக சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் சின்னத்திரையில் ஒரு நடன கலைஞராக அறிமுகமானவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் குமரன். நடிப்புக்கான வாய்ப்புகளை தேடி வந்த போது தன்னை மக்களிடம் தெரியப்படுத்துவதற்காக நடனம் என்ற ஒரு துறையை இவர் தேர்ந்தெடுக்க, அதுவே இவருக்கு அடையாளமாக மாறியது. எங்கே, தான் தேடி வந்த விஷயத்தை இழந்து விடுவோமோ என இருந்து வந்த நடிகர் குமரனுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான்.
Vijay TV Bigg Boss 5 Promo | பாவ்னிக்கு வலை விரித்த அமீர், கடுப்பான பிரியங்கா!
இந்த ஒரேயொரு சீரியல் மூலம் தமிழக மக்களின் பேரன்புக்கு பாத்திரமாக மாறி இருக்கிறார் நடிகர் குமரன். இந்த தொடரில் நடிகர் குமரன் நடித்து வரும் கதிர் என்ற கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்க, கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கும் ஒரு கூட்டம் ரசிகர்கள் உள்ளனர். தவிர இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் இவருக்கு நடிகர் என்ற மிகப்பெரும் அங்கீகாரத்தையும், விருதுகளையும் கூட பெற்று தந்திருக்கிறது.
இப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிராக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பயணித்து வரும் இவர் முதன் முறையாக ஒரு முக்கியமான விஷயத்தை தனது ரசிகர்களுடன் ஷேர் செய்திருக்கிறார். அதாவது மற்ற பிரபலங்களை போலவே இவருக்கும் ஆரம்பத்தில் ஸ்டேஜ் பயம் இருந்திருக்கிறதாம். இதை எப்படி தாண்டி வந்தார் என்பது குறித்து நடிகர் குமரன் கூறுகையில், ‘மேடையில் ஏறுவது எனக்கு எப்போதும் பயமாகவே இருந்தது. அந்தக் கவலையைப் போக்க நினைத்தேன். என்னால் முடியவில்லை.
ஆனால் பதட்டத்தைக் குறைக்க ஒரு மாத்திரையை கண்டுபிடித்தேன். நான் அதை எடுத்துக் கொண்டேன். தினமும் எடுத்துக்கொண்டேன். நிறைய எடுத்தேன். அடிக்கடி சாப்பிட்டேன். பிறகு அந்த மாத்திரையை ரசிக்க ஆரம்பித்தேன். அதற்கு அடிமையானேன். அது போல உங்களுக்கும் ஏதாவது செய்ய பயமாக இருந்தால், நீங்களும் அதனை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாத்திரையின் பெயர் PRACTICE’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்டராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.