தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீடு – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பில் மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனையில் தாமதம் ஏற்படக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மருத்துவ படிப்புகள்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் தமிழகத்தில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
NEET, JEE 2021 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய கல்வி அமைச்சரின் விளக்கம்!
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவ கல்வி குறித்து மத்திய அரசின் அறிவிப்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விட, அதை தாமதப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. இது முற்றிலும் நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர்ஆலோசனை!
இந்த அறிவிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில், மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையில், தமிழ்நாட்டுக்கான இடங்களைப் பொருத்தவரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கு குறித்த முடிவை உச்சநீதிமன்றத்தில் சலோனிகுமார் வழக்கில் தெரிவித்து விட்டு, அதன் பிறகு தான் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகை போட்டி – ஆகஸ்ட் 31 இறுதி நாள்!
ஆனால் மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தேவையில்லை. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டின் படியோ, மாநில அரசு இட ஒதுக்கீட்டின் படியோ இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மத்திய அரசே இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கலாம் ஆனால் கால தாமதம் ஏற்படுத்தவே மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
எனவே மத்திய அரசு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்கான சட்டம் வரும் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.