தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார். மேலும் மாவட்டங்களில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரத்திற்கேற்ப தமிழக மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு, பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வகை 1ல் இடம் பிடித்திருந்த 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் எதுவும் வழங்கவில்லை. வகை 2ல் காணப்படும் 23 மாவட்டங்களில் சிறிய அளவில் தளர்வுகளும், வகை 3ல் இடம்பெற்றிருக்கும் 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகை போட்டி – ஆகஸ்ட் 31 இறுதி நாள்!
இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 28ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் வகை 1ல் இடம்பெற்றிருக்கும் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் கோவில்கள் திறப்பு – அமைச்சர் உறுதி!
தற்போது பாதிப்பு அதிகமாக காணப்படும் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடுதல் தளர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.