NEET, JEE 2021 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய கல்வி அமைச்சரின் விளக்கம்!
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் நிஷாங்க் அவர்கள் இன்று சமூக ஊடகம் வாயிலாக மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க உள்ள நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த கேள்விகளும் அதிக அளவில் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடக சந்திப்பு:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. மத்திய கல்வி வாரியத்தின் மதிப்பீடு முறைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சரிடம் சமூக ஊடகங்கள் மூலமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு பிறகான பாதிப்புகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் நிலையிலும், மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக இன்று ஜூன் 25ம் தேதி மாலை 4 மணி அளவில் சமூக ஊடகம் வாயிலாக சந்திப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வுகள் தொடர்பான வேறு ஏதேனும் கேள்வி உங்களிடம் இருந்தால், நீங்கள் எனக்கு ட்விட்டர், பேஸ்புக் அல்லது அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் என்று தனது டிவீட்டர் கணக்கில் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்? முதலவர் ஆலோசனை!
இன்றைய கலந்தாய்வில், 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ மதிப்பீட்டு அளவுகோல் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதாக அறிவித்துள்ளார். இருப்பினும், நடப்பாண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை குறித்து மாணவர்கள் அதிக கேள்விகளை கேட்பதற்கு வாய்ப்பிருப்பதால் மத்திய கல்வி அமைச்சர் நுழைவுத்தேர்வுகள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Neet venam sir….it’s not good