கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – இங்கிலாந்து அங்கீகாரம்!
கொரோனா பரவல் அச்சத்தினால் தீவிர தொற்று பாதிப்பு உள்ள நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இங்கிலாந்து தடை விதித்திருந்தது. இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கு தற்போது அனுமதி அளித்துள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசி:
கொரோனா தொற்றின் முதல் அலை 2020 டிசம்பர் மாத்தில் உலகம் முழுவதும் குறைய தொடங்கி மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால் மக்களின் கவனக்குறைவினால் இரண்டு மாதங்களில் அதாவது, 2021 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மெல்ல பரவத் தொடங்கியது. ஆனால் இரண்டாம் அலையில் வரலாறு காணாத அளவிற்கு உலகம் முழுவதும் பாதிப்புகள் பதிவாகியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் எல்லையை மூட தொடங்கியது. அண்டை நாடுகளுடனான அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்தது.
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஓய்வூதியர்களின் ஆன்லைன் சேவைகள் புதுப்பிப்பு!
உலக நாடுகள் தங்களின் அங்கீகாரத்திற்கு உட்பட தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களை மட்டும் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாடு கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளை பாதிப்பின் அடிப்படையில் ‘சிவப்பு’, ‘அம்பர்’ மற்றும் ‘பச்சை’ என்று மூன்று வகையாக பிரித்துள்ளது. இந்தியாவை ‘அம்பர் பட்டியலில்’ இங்கிலாந்து வைத்துள்ளது. இங்கிலாந்திற்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு நபர் ‘அம்பர் பட்டியல்’ நாட்டில் இருந்திருந்தால், அவர் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா வைரஸ் சோதனை எடுக்க வேண்டும்.
கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வந்தால் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.50,401.70 அபராதம் என்று அறிவித்துள்ளது. அதன் பின்னர, 2ம் நாளில் கொரோனா சோதனை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. முன்னர், இங்கிலாந்து நாட்டில் இந்தியர்கள் கோவிஷீல்டின் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் தற்போது, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் கோவிஷீல்டை இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 356% அகவிலைப்படி உயர்வு – தகுதி உள்ளிட்ட விவரங்கள்!
குறிப்பாக, அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட், அஸ்ட்ராஜெனேகா வக்ஸெவ்ரியா மற்றும் மாடர்ன் டகேடா போன்ற நான்கு தடுப்பூசிகளையும் அங்கீகரித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்திற்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் முழுமையான அளவை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.