இந்தியாவில் முதன் முறையாக பறக்கும் பேருந்துகள் அறிமுகம் – 100 கி.மீ வேகத்தில் பாய்ச்சல்!
மெட்ரோ ரயிலை போலவே பறக்கும் பேருந்துகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ள்ளார். மேலும், இந்த பேருந்துகள் நிமிடத்திற்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பறக்கும் பேருந்துகள்
உலகம் முழுவதும் போக்குவரத்து துறைகளில் பலவிதமான திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. அதாவது, பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்கவும், எந்தவித இடையூறுகளும் இல்லாமல் பயணத்தை எளிமையாக தொடர்ந்து பலவிதமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோவை போலவே இருக்கும் ஸ்கை பஸ் எனப்படும் பறக்கும் பேருந்துகளை இந்தியாவில் இயக்க இருக்கின்றனர். இந்த புதிய திட்டம் கூடிய விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு திடீர் உத்தரவு!
அதாவது, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் மற்றும் எரிபொருட்களின் தேவையை குறைக்கவே இத்தகைய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இது சாதாரண பேருந்துகளை காட்டிலும் முற்றிலும் மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கை பஸ் காற்று மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு மின்சாரத்தால் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஸ்கை பஸ் தவுலா குவானில் தொடங்கி மனேசர் வரை இயங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, ஸ்கை பஸ் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெறும் 24 நிமிடங்களிலேயே தௌலா குவான் பகுதியில் இருந்து மனேசரை சென்றடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கை பஸ் திட்டம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தௌலா குவான் பகுதியை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்கை பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.