இந்திய அஞ்சல் துறை வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மே 20ம் தேதி கடைசி நாள்!
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஏதேனும் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 2 ஆண்டுகள் கிராமின் டாக் சேவாக் பணியில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
TNPSC Group 2, 2A தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? கடைசி நேரத்தில் இப்படி தயாராகுங்கள்!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 30.04.2022 தேதியின்படி 20 முதல் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் 30.04.1987 – 30.04.2002 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. இதற்குரிய தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, கடலூர், ஈரோடு, நாகர்கோவில், சேலம், திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.
Exams Daily Mobile App Download
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.ippbonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வாயிலாக வருகிற 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.700 வசூலிக்கப்படுகிறது. இதற்கான தேர்வு ஜூலையில் நடைபெறும் என்றும் அதற்குள் தேர்வு நுழைவுச்சீட்டை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை அறிய www.ippbonline.com அல்லது https://www.ippbonline.com/