நாடு முழுவதும் ஒரே நாளில் 4,194 பேர் பலி – 2.57 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி!
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று புதிய பாதிப்புகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கே இதற்கு முக்கிய காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் குறையாமல் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கடந்த வருட மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆண்டு இறுதியில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது. பின்னர் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக இயல்பு நிலை திரும்பியது. இதுவே கொரோனா 2வது அலை தீவிரமடைய முக்கிய காரணமாகும். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை மறந்ததற்கான விளைவை தற்போது நாடு சந்தித்து வருகிறது.
எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தில் 707 பணியிடங்கள் – 4.7 லட்சம் விண்ணப்பம்!!
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2,57,299 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,62,89,290 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,57,630 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,30,70,365 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 19,33,72,819 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஒரே நாளில் 4,194 பேர் உயிரிழந்து உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 2,95,525 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் 29,23,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.