எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தில் 707 பணியிடங்கள் – 4.7 லட்சம் விண்ணப்பம்!!
எம்.எஸ்.எம்.இ., சம்பார்க் தொழில் நிறுவனங்களில் 707 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு இணையதளம் மூலம் 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக நாடு பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. ஊரடங்கு காரணத்தினால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் மூடபட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வேலையிழந்து சிரமப்படுகின்றனர். இந்த ஊரடங்கால் வேலை அளிக்க முடியாத நிலையில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. பரவி வரும் கொரோனா வேலைவாய்ப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!
அதனால் எம்.எஸ்.எம்.இ., சம்பார்க் நிறுவனத்தில் 4.7 லட்சம் பேர் இணையதளத்தில் விண்ணப்பித்து காத்து கிடக்கின்றனர். எம்.எஸ்.எம்.இ சம்பார்க் திட்டம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் 2018 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 1.5 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. எம்.எஸ்.எம்.இ தேசிய நிறுவனத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 148% அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா கடந்த வருடம் முதல் பரவி வருவதால் வேலைவாய்ப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் மே 21 நிலவரப்படி, அரசின் இணையதளத்தில் 707 பணியிடங்களுக்கு 4,71,922 பேர் விண்ணப்பித்து காத்துக் கிடக்கின்றனர். கடந்த 2020 ஆம் நிதியாண்டில் 154 பயிற்சித் திட்டங்களில் 3,999 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் 95 பயிற்சித் திட்டங்களின் கீழ் 9,935 பேர் பயிற்சி அளித்துள்ளனர் எம்.எஸ்.எம்.இ சம்பார்க் நிறுவனம் பயிற்சியளித்த 1.5 லட்சம் மாணவர்களையும் இந்த இணையதளம் மூலம் பணிக்கு அமர்த்தலாம் என இத்திட்டம் தெரிவித்துள்ளது.