ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் கர்நாடகா முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. அங்கு தினமும் 30,000 கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் அங்கு 6,000 க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? இன்று மாலை முக்கிய அறிவிப்பு!!
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் தொற்று பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஜூன் 7ம் தேதி வரை மாநிலத்தில் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கர்நாடகா மாநிலத்தில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் பரவி வருகிறது. இதனால் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துளார்.