தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? இன்று மாலை முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு வரும் திங்கள் கிழமையுடைன் (மே 24) முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்திலும் மாநிலம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்துக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. தவிர பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த ஒரு நாள் பாதிப்பில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி முதல் 31 வரை கொரோனா உச்சம் அடையும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தமிழகத்தில் பேருந்துகள் இயங்க அனுமதி – மே 24 முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு!
இப்போதுள்ள சூழலை கணக்கில் கொண்டால் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக மருத்துவமனைகளில் பல தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதாவது நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கொரோனா பரிசோதனைகள் குறைந்துள்ளதாகவும், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாத காரணத்தாலும் நோய் பரவல் அதிகரித்ததாக கருத்துக்கள் பரவலாக எழுந்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து, முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர் குழுவினருடன் இன்று (மே 22) ஆலோசனை நடத்த உள்ளார். இதை தொடர்ந்து பின் காலை 11:30 மணியளவில் எம்எல்ஏக்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாரதியஜணதா கட்சி வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் துணைத்தலைவர் நீ இசக்கிமுத்து சிவகிரி நன்றி