தமிழகத்தில் பேருந்துகள் இயங்க அனுமதி – மே 24 முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு!
தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை (மே 24) முதல் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இன்றி மிகத்தீவிர முழு ஊரடங்கு அமலபடுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதற்காக இன்றும், நாளையும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை கடைகள், பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தீவிர ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தினசரி காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் உத்தரவை மீறி பலரும் வெளியே சுற்றுவதை காண முடிகிறது.
இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கோரி உள்ளனர். தற்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உளளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மே 24 முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாவட்ட அரசு அறிவிப்பு!!
இதனால் இன்றும், நாளையும் மட்டும் வெளியூர் பயணத்திற்கு தனியார், அரசுப்பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படும். காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை மின்னணு சேவைகள் செயல்பட அனுமதி உண்டு. பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல்படும்.