மே 24 முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாவட்ட அரசு அறிவிப்பு!!
லே லடாக் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 24 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 7 ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக மாநிலங்கள் தோறும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தவிர சில மாநிலங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் மேலும் நீட்டித்து வருகிறது. இந்த நிலையில் லடாக்கில் மே 24 காலை 7 மணி முதல் ஜூன் 7 காலை 7 மணி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரம் மிகத்தீவிர முழு ஊரடங்கு – அரசு திட்டம்!!
கொரோனா புதிய பாதிப்புகளின் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கை விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக லே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் லடாக்கில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தீவிர கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. அந்த வகையில்,
- மே 22 முதல் அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் மக்கள் வருகை அனுமதிக்கப்படாது.
- மேலும் அனைத்து அரசாங்க அலுவலகர்களும் நேரடி சந்திப்பை தவிர்க்க வேண்டும்.
- வார இறுதி நாட்களில் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வகையான இயக்கங்களுக்கும் முழு கட்டுப்பாடு.
- லே மாவட்டம் முழுவதும் மே 24 முதல் ஜூன் 7 வரை அனைத்து சேவைகளுக்கும் தடை.
- பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வங்கிகள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் காலை 9 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 5:30 மணி வரையும் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து மட்டுமே அனுமதி கொடுக்கப்படும்.
- லே மாவட்டத்தில் குறைந்த அளவிலான டாக்ஸிகள், பேருந்துகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும்.
தனியார் நிறுவனங்கள் செயல்படலாமா
இது திமுகவினரை கட்டுபடுத்துமா. இல்லை காவல்துறை கட்டுபடுமா?