தமிழகத்தில் ஒரு வாரம் மிகத்தீவிர முழு ஊரடங்கு – அரசு திட்டம்!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இன்றி மிகத்தீவிர முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
மிகத்தீவிர முழு ஊரடங்கு:
தமிழகம் முழுவதும் கடந்த மே 10 முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தினசரி பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மே 24 உடன் முடிவடைய உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர் குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் முழு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மின் கட்டண விளக்கம் வெளியீடு – வீடுகள் தோறும் கணக்கீடு!
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இன்றி மிகத்தீவிர முழு ஊரடங்கை மட்டும் அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் காலை 10 மணி வரை மளிகை, இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிகத்தீவிர ஊரடங்கில் மருந்து கடைகள் உள்ளிட்ட மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழக முழுவதும் 36 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 400க்கும் அதிகமாக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மேலும் 2 வாரம் அதாவது ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.