தமிழகத்தில் மின் கட்டண விளக்கம் வெளியீடு – வீடுகள் தோறும் கணக்கீடு!

0
தமிழகத்தில் மின் கட்டண விளக்கம் வெளியீடு - வீடுகள் தோறும் கணக்கீடு!
தமிழகத்தில் மின் கட்டண விளக்கம் வெளியீடு - வீடுகள் தோறும் கணக்கீடு!
தமிழகத்தில் மின் கட்டண விளக்கம் வெளியீடு – வீடுகள் தோறும் கணக்கீடு!

தமிழகத்தில் மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மின் கணக்கீடு:

தமிழகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில், 100 யூனிட் அளவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த 100 யூனிட் அளவுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களின் அடிப்படையில் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. இதில் நிலை கட்டணமும் வசூலிக்கப்படும். இந்நிலையில் இந்த மே மாதத்துக்கான மின் கட்டணத்தை வீடுகளில் இருந்தபடியே கணக்கீடு செய்து கொள்ளலாம் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 1,300 வங்கி ஊழியர்கள் கொரோனாவால் பலி – அதிர்ச்சி தகவல்!

முன்னதாக மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக மின்சார வாரியம் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் 100 யூனிட் மின்சாரத்துக்கு 0 கட்டணமும், 110 யூனிட் மின்சாரத்துக்கு 35 ரூபாய் கட்டணம், 200 யூனிட் மின்சாரத்துக்கு 170 ரூபாய் கட்டணம், 210 யூனிட் மின்சாரத்துக்கு 260 ரூபாய் கட்டணம், 290 யூனிட் மின்சாரத்துக்கு 500 ருபாய் கட்டணம், 390 யூனிட் மின்சாரத்துக்கு 800 ரூபாய் கட்டணம், 500 யூனிட் மின்சாரத்துக்கு 1130 ரூபாய் கட்டணம், 510 யூனிட் மின்சாரத்துக்கு 1846 ரூபாய் கட்டணம், 600 யூனிட் மின்சாரத்துக்கு 2440 ரூபாய் கட்டணமாக வசூலிப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

தொடர்ந்து 700 யூனிட் மின்சாரத்துக்கு 3100 ரூபாய் கட்டணம், 800 யூனிட் மின்சாரத்துக்கு 3760 ரூபாய் கட்டணம், 1000 யூனிட் மின்சாரத்துக்கு 5080 ரூபாய்கட்டணம் , 1200 யூனிட் மின்சாரத்துக்கு 6400 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண அளவின் படி மின் அளவை மதிப்பிட்டு, அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு உங்கள் மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம். இதில் ஏதேனும் சந்தேங்கள் ஏற்பட்டால், மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!