IND vs ENG 3வது Test – கேஎல் ராகுல் மீண்டும் ஏமாற்றம்! தடுமாற்றத்தில் இந்திய அணி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 354 ரன்களுக்கு பின்தங்கிய நிலையில், தற்போது இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்துடன் விளையாடி வருகின்றனர்.
IND vs ENG 3வது Test:
இந்தியா அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்களில் இமாலய வெற்றி பெற்று அசத்தியது. இதனால் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணி மாற்றமின்றி களமிறங்கியது.
2021 போட்டி அட்டவணையில் இருந்து விலகிய தங்க மகன் நீரஜ் சோப்ரா – இதுதான் காரணம்!
தற்போது லீட்ச்சில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சில் சிதறினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் (19) மற்றும் ரஹானே (18) தவிர யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
IPL 2021: கொல்கத்தா & பஞ்சாப் அணிகளில் மாற்றங்கள் அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 40.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு வரிசையாக ரோரி பர்ன்ஸ் 61 ரன்கள், ஹசீப் ஹமீது 68 ரன்கள், கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் மற்றும் மலான் 70 ரன்கள் ஆகியோர் வலுவான ஸ்கோர் அடைவதற்கு விதித்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132.2 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.
Tokyo Paralympic 2020 – இந்திய வீராங்கனை பவினா படேல் காலிறுதிக்கு முன்னேற்றம்!
தற்போது 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கியுள்ளது இந்திய அணி. கடினமா இலக்கை விரட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரார்கள் ரோஹித் மற்றும் நீதமாக விளையாடி வருகின்றனர். உணவு இடைவேளை நெருங்கிய நேரத்தில் ராகுல் 8 ரன்களில் (54 பந்துகள்) ஓவெர்டன் பந்து வீச்சில் பரிஸ்டோவிடம் கேட்ச் ஆனார். உணவு இடைவேளையில் இந்திய 19 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து 320 ரன்கள் பின்தங்கியுள்ளது.