2021 போட்டி அட்டவணையில் இருந்து விலகிய தங்க மகன் நீரஜ் சோப்ரா – இதுதான் காரணம்!
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா உடல்நிலை சரியில்லாததினால் அடுத்து வரும் போட்டிகளில் இருந்து முழுவதுமாக விலகினார்.
தங்க மகன் நீரஜ் சோப்ரா:
இந்தியாவை சேர்ந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா (வயது 23). ஈட்டி எறிதல் போட்டிகளில் தனது திறமையின் காரணத்தினால் பலவேறு பதக்கங்களை குவித்துள்ளார். தேசிய அளவில் 88.07மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அதுவே தற்போது வரை தேசிய அளவில் சாதனையாக உள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 87.58மீ தூரம் வரை ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
IPL 2021: கொல்கத்தா & பஞ்சாப் அணிகளில் மாற்றங்கள் அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தடகளத்தில் இந்தியா வென்ற முதல் பதக்கம் என்ற வரலாறு படைத்தார். இந்திய மக்களால் தங்க மகன் என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார் நீரஜ் சோப்ரா. நீரஜ் என்ற பெயர் உள்ளவர்களுக்கு 2லி பெட்ரோல் இலவசம் என சில பெட்ரோல் பங்களில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. இதுவே அவர் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள அன்பிற்கு சான்று. ஆனால் பதக்கம் வென்று விட்டு நாடு திரும்பியது முதல் நீரஜ் சோப்ராவிற்கு உடல்நிலை சரியில்லாததாகவே இருந்தது.
தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு வந்த சோதனை – சர்ச்சை கருத்துகளுக்கு சாடல்!
காய்ச்சல், தலைவலி, வாந்தி என உடற்கோளாறுக்கு ஆட்பட்டவர் இன்னும் மீளவில்லை. தொடர்ந்து உடல்நிலை சீராகாத இலையில் அடுத்து வரும் போட்டிகளில் எப்படி கலந்து கொள்ளுவர் என கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை முன்னேற்றமில்லாத காரணத்தினால் இந்த 2021ம் ஆண்டில் அடுத்து வரும் போட்டிகளில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்து உள்ளார். உடல்நிலையை சரி செய்ததன் பின்னர் வருங்காலத்தில் மீண்டும் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.