மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் ரூ.26,000 வரை உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!
7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை ரூ.26,000 வரை உயர்த்தும் வகையில் ஃபிட்மென்ட் காரணி உயர்வை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 34% ஆக உயர்த்தி அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், உயர்த்தப்பட்ட இந்த DA பலனை லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பெற்று பயனடைய உள்ளனர். இப்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில், ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் மத்திய அரசு ஊழியர்கள், இது தொடர்பான சில நல்ல செய்திகளை விரைவில் பெறலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த அரசு ஒப்புதல் அளித்தால், ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும். அதாவது, ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆக உயர்த்தப்பட்டால், சம்பளம் ரூ. 95,680 (26000X3.68 = 95,680) வரை உயரக்கூடும்.
தமிழகத்தில் நாளை (ஏப்.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இப்போது, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து, 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) வரை சம்பளம் பெறலாம். குறிப்பாக, 3.68 மடங்கு ஃபிட்மென்ட் காரணி உயர்வால் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18000 லிருந்து ரூ.26000 ஆக உயரும். மேலும், அகவிலைப்படி, வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட மற்ற அனைத்து கொடுப்பனவுகளும் ரூ.26000 என்ற அடிப்படை ஊதியத்தில் கணக்கிடப்படும். குறிப்பாக, ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும்.