அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ராஜஸ்தானில் கால்நடை மருத்துவ ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு தங்களது கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பயன் பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி மேலும் 3% உயரும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் 4 முதல் 5% வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – முக்கிய ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தற்போது மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்த்தி வருகின்றனர். தற்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இராஜஸ்தானில் கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மருத்துவம் மற்றும் ஆயுர்வேத பயிற்சி ஊழியர்களுக்கு மட்டுமே அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கு 3500 முதல் 14000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி மற்றும் உதவித் தொகை ஏப்ரல் 1ம் தேதி முதல் தேதியிட்டு மருத்துவ, ஆயுர்வேத கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.