மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு எப்போது? முக்கிய தகவல் வெளியீடு!
சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும், அப்போது அவர்கள் அகவிலைப்படி உயர்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி (DA) உயர்வு:
அகவிலைப்படி (DA) அரசு ஊழியர்களுக்கு பணவீக்கத்தை சமாளிப்பதற்காக ஆண்டுதோரும் இருமுறை வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அகவிலை நிவாரணம் (DR) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசு திருத்தி அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பு ஆண்டு ஜனவரியில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது. அதாவது ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR 3% உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு!
இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைந்தனர். இந்நிலையில் இந்த (ஆகஸ்ட்) மாதத்தில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகுதியாக உள்ளதால் இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் அல்லது 5 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் அகவிலைப்படி 5 % உயர்த்தப்பட்டால் DA எண்ணிக்கையானது தற்போதைய 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதம் ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்த அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும். அந்த வகையில் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு, 38 சதவீதத்தை எட்டினால் அடிப்படை சம்பளமானது ரூபாய் 18,000 உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 720 (அல்லது) வருடத்திற்கு ரூபாய் 8,640 ஆக சம்பளம் உயர்த்தப்படும். அதன்பின் ரூபாய் 50,000 அடிப்படைச் சம்பளம் இருப்பவர்களுக்கு ரூபாய் 2,000 மாதாந்திர உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த DA அதிகரிப்பு 5 சதவீதம் ஆக இருப்பின், இந்தத் தொகையானது ரூபாய் 18,000 அடிப்படைச் சம்பளத்துக்கு மாதம் ரூபாய் 900 ஆகவோ (அல்லது) வருடத்திற்கு ரூபாய் 10,800 ஆகவோ மாறும்.அத்துடன் ரூபாய் 50,000 அடிப்படை சம்பளத்திற்கு ரூபாய் 2,500 உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.