இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு!
உலக நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற கொரோனா பரவல் தற்போது அதிவேகமாக 4 கோடியே 41 லட்சத்து 45 ஆயிரத்து 100 பேருக்கு உறுதியாகி உயர்ந்துள்ளது. அதனால் நோய் தொற்றின் அவசர நிலையை குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
உலக நாடுகளில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இருக்க கூடிய பேராசையே நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்பதுதான். அவ்விதமாக இந்த கொரோனா வைரஸ் பல கோடி சொத்துக்கு உரிமையாளராக இருந்தாலும் அதை அனுபவிக்க நோய் நொடியில்லா வாழ்வு முக்கியம் என்ற பாடத்தை கற்று கொடுத்துவிட்டது. அப்பேற்பட்ட விலை மதிக்க முடியாத உயிருக்கு ஒரு ஆபத்து என்றால் சும்மாவா? கடந்த 2 வருட காலமாக கொரோனா என்ற பெரு நோய் தொற்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் ஆட்டி படைத்து பல உயிர் சேதங்களையும், பொருளாதார வறுமையையும் கொடுத்தது.
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு – நாளை (ஆக.8) ஆன்லைன் மாதிரி தேர்வு!
நடப்பு ஆண்டில் கூட ஓரளவு குறைந்து அப்பாடா என பெரும் மூச்சு விட்டு முடிப்பதற்குள் மீண்டும் உருவெடுத்து தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் இந்த கொரோனா பாதிப்பு மீண்டும் பழையபடி உருவெடுத்து பரவி வருகிறது. அதிலும் டெல்லியில் 2,311 பேருக்கும், மகாராஷ்டிராவில் 1,931 பேருக்கு என அதிகபட்சமாக இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து மும்பையிலும் கடந்த வார பாதிப்பை விட இந்த வாரம் 486 என இருமடங்காக உயர்ந்துள்ளது. மேலும், கர்நாடகாவில் 1,694, கேரளாவில் 1,113, தமிழ்நாட்டில் 1,094 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
எனவே நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்திற்குள் 18,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, மொத்த பாதிப்பு 4 கோடியே 41 லட்சத்து 45 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,18,558 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 40 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 5,26,689ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை கொரோனா நிலவரம் குறித்த தகவலையும், பரிசோதனைகளை தீவிரப்படுத்தி தொற்று பரவலை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.