Post Office சேமிப்பு திட்டங்களில் வருமானத்துடன் வரி சலுகை – சேமிப்போர் கவனத்திற்கு! முழு விவரம் இதோ!

0
Post Office சேமிப்பு திட்டங்களில் வருமானத்துடன் வரி சலுகை - சேமிப்போர் கவனத்திற்கு! முழு விவரம் இதோ!
Post Office சேமிப்பு திட்டங்களில் வருமானத்துடன் வரி சலுகை - சேமிப்போர் கவனத்திற்கு! முழு விவரம் இதோ!
Post Office சேமிப்பு திட்டங்களில் வருமானத்துடன் வரி சலுகை – சேமிப்போர் கவனத்திற்கு! முழு விவரம் இதோ!

அஞ்சல் நிலையத்தின் உள்ள சேமிப்பு திட்டம் நிரந்தரமான வருமானத்துடன் வரி சலுகையும் அளிக்கிறது. அத்தகைய திட்டங்களின் அதன் வட்டி விகிதம், முதிர்வு காலம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா:

அஞ்சல் துறை மக்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தியும் வருகிறது. ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்புக்காக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலகத் திட்டங்கள் கை கொடுக்கும். வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அஞ்சலத்தில் நிரந்தரமான வருமானத்துடன் வரி சலுகை அளிக்கும் திட்டமும் உள்ளது. அதில் ஒன்று தான், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத்திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பேரில் கணக்கு தொடங்கலாம். குறைந்த பட்சம் 250 ரூபாய் கொண்டு இத்திட்டத்தை தொடங்கலாம். மேலும் அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வைப்பு தொகை செலுத்தலாம். இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் தேவை எனில் கணக்கு தொடங்கப்பட்ட பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும் போது 50% பணத்தை எடுக்கலாம். இந்த திட்டத்தில் தற்போது 7.6% வட்டி அளிக்கப்படுகிறது. அத்துடன் கூடுதலாக வரிச் சலுகையும் உண்டு. அதன்படி வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

2வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் – முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு!

அதே போல பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 7.1% வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது. இதனுடன் கூடுதலாக 80சி பிரிவின் கீழ் 1,50,000 லட்சம் வரையில் வரிச்சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அதனை தொடர்ந்து மூத்த குடிமக்கள் திட்டத்திலும் வரிச்சலுகை உண்டு. இது பாதுகாப்பான திட்டமாகவும், ரிஸ்க் இல்லாத ஒரு திட்டமாகவும் உள்ளது. அடுத்ததாக பிக்சட் டெபாசிட் இதில் 7% வட்டி அளிக்கப்படுகிறது. இதில் 40,000 ரூபாயினை தாண்டினால் டிடிஎஸ் 10% பிடித்தம் செய்யப்படும். இதிலும் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!