வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாத நிலை – பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் நேற்று மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாததால் பல இடங்களில் மக்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
வாக்களிக்க முடியாத நிலை:
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
- 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
- நேற்று பலரும் ஆர்வத்துடன் வாக்களிக்க சென்றிருந்தனர். கையில் வாக்காளர் பெயர் வாக்காளர் அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டது.
- ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உண்டு மனைவிக்கு ஓட்டு இல்லை என பல வாக்குச்சாவடிகளில் இந்த பிரச்னை இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
- இதனால் வாக்களிக்க வந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. மேலும் கணவர் மனைவி இருவருக்கும் வேறு வேறு வாக்குச்சாவடிகளில் பெயர் பட்டியல் இருப்பதால் அவர்களும் வாக்களிக்க மிகவும் சிரமப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்திய கடற்படைக்கு புதிய தளபதி நியமனம் – முழு விவரம் இதோ!
- சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உட்பட்ட பல பிரச்சனைகள் இருந்தாக பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதமானது.
- ஒருவர் ரூபாய் 1.5 லட்சம் செலவு செய்து சென்னையில் வாக்களிக்க வந்திருந்தார்.
- ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்ற காரணத்தினால் அவர் வாக்களிக்க முடியாமல் போனது, மேலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டால் முறையாக பதில் ஏதும் அவர்களுக்கு தராமல் அளக்களித்ததாக அவர் குற்றச்சாட்டு உள்ளார்.
- பொதுமக்கள் முதல் நடிகர் வரை வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
- இதற்கு அடுத்த முறை ஆவது தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.