தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் தமிழருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழர்களுக்கு வேலை
தமிழகத்தில் அரசு பணிகளில் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்கள் பணி ஆணைகளை பெற்று வந்தனர். இதனை தடுக்கும் விதமாக TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும் என தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தற்போது நடைபெறும் அனைத்து வகையான தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இத்தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற பகுதிகள் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளதாவது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தமிழ் மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் பணியில் சேருவது குறையும். இந்த நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமில்லை என்பதால் இதில் 100க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!
அதனால் தமிழகத்தில் நடைபெறும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்டவை நடத்தும் போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80% தமிழருக்கே பணி ஆணைகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக அரசு விரைவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்