தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், ஈட்டிய விடுப்பு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், ஈட்டிய விடுப்பு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், ஈட்டிய விடுப்பு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், ஈட்டிய விடுப்பு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் மற்றும் ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவை வேண்டும் என்று பல்வேறு சலுகைகளை பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. அத்துடன் நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தை மாற்றியுள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, மாதந்தோறும் வழங்கப்படும் தொகை உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதில்லை. அதனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய ஆரம்ப காலத்தில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ExamsDaily Mobile App Download

இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும். இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டு முதல் நிதி பற்றாக்குறை காரணமாக தற்போது வரை தடை தொடருகிறது.

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் நியூஸ் – உயரும் EMI கட்டணம்!

அதனால் அரசு ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு சலுகைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, ஈட்டிய விடுப்பு மீண்டும் அனுமதித்தல் மற்றும் கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!