மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வுடன் கூடுதல் சலுகை? முழு விவரம் இதோ
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி உயர்வை பெற்றுள்ள நிலையில் இதனுடன் கூடுதலாக 4 கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
கூடுதல் சலுகை
கடந்த மார்ச் மாதத்தில் 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சமீபத்திய உயர்வு மூலம், மொத்த DA தொகை இப்போது அடிப்படை வருமானத்தில் 34% ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் லாபம் அடைய இருக்கின்றனர். இப்போது அகவிலைப்படி உயர்வுடன் கூடுதலாக 4 கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
DA என்பது அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்திற்கு விகிதாசாரமாகும். இதன் விளைவாக, DA உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர வருங்கால வைப்பு நிதியும் (PF) உயர்த்தப்படும். மேலும் டிஏ உயர்வு காரணமாக ஊழியர்களின் பணிக்கொடைத் தொகையும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் பயண/போக்குவரத்து கொடுப்பனவு மற்றும் நகர அலவன்ஸ் ஆகியவற்றின் உயர்வுக்கான பாதையை தெளிவுபடுத்தி இருக்கிறது.
IIM திருச்சியில் வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
ஏனென்றால் ஒவ்வொரு முறை அகவிலைப்படி (DA) உயர்த்தப்படும் போதும் அரசு ஊழியர்களுக்கான நகர அலவன்ஸ் அல்லது வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் 28% ஆக DA உயர்த்தப்பட்ட போது அரசு ஊழியர்களின் HRA தொகை அதிகரித்தது. தொடர்ந்து இம்முறை 34% ஆக DA உயர்ந்துள்ளதால் HRA ஐ உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது நடந்தால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பு இருக்கும்.