IIM திருச்சியில் வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
இந்திய மேலாண்மை நிறுவனம் எனும் திருச்சி மாவட்டத்தில் உள்ள IIM நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Professor, Associate Professor மற்றும் Professor பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | IIM Trichy |
பணியின் பெயர் | Assistant Professor, Associate Professor and Professor |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IIM Trichy காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Assistant Professor, Associate Professor மற்றும் Professor பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
IIM Trichy கல்வித் தகுதி:
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IIM Trichy அனுபவ விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் Teaching / Research / Industry களில் Assistant Professor பணிக்கு 03 ஆண்டுகள், Associate Professor பணிக்கு 06 ஆண்டுகள் மற்றும் Professor பணிக்கு 10 ஆண்டுகள் என முன் அனுபவம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
IIM Trichy ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் அளிக்கப்படும்.
Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level 12 ன் படி, Associate Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level 13A2 ன் படி, Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level 14 A ன் படி, மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIM Trichy தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IIM Trichy விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.