தமிழக பொது மக்களுக்கான முக்கிய எச்சரிக்கை – மாநகராட்சி உத்தரவு! கனமழை எதிரொலி!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சாலைகளில் கிடக்கும் மரங்கள், மரக்கிளைகளை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முக்கிய உத்தரவு:
சென்னையில் கடந்த 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்களில் மாலை நேரங்களில் பெய்த கனமழை காரணமாக 19 இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக 36 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். மேலும் சென்னை மாநகராட்சி அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 3 நாட்கள் பெய்த மழைக்கே இவ்வளவு மரங்கள் விழுந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டு, சென்னையில் விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Exams Daily Mobile App Download
வடகிழக்கு பருவமழை, அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பருவ மழைக்கு முன்பாக, நான்கு மாவட்டங்களில் வெள்ள நீர் வடிவதற்காக, நீர் வழித்தடங்கள் துார் வாரப்படுகின்றன. கடந்த 2021ம் ஆண்டு துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கனமழை காரணமாக, நான்கு மாவட்டங்களிலும் அதிகளவில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதித்தது குறிப்பிட வேண்டியவை.
தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் – சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள்,மரக்கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையோர மரங்களின் தாழ்வான கிளைகள் செப்பனிடப்படுவதை சென்னை மாநகராட்சி கண்காணிக்க வேண்டும். மரங்கள் கீழே விழுந்தால் அப்புறப்படுத்த தேவையான எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சில இடங்களின் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததில், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றன.