தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு முக்கிய எச்சரிக்கை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரிகள் தொடர்பாக மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கல்குவாரிகளுக்கான எச்சரிக்கை
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே மாதம் பாறை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் குவாரிகள், கிரசர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விதிமுறையை மீறி செயல்படும் கல் குவாரிகளுக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதம் உள்ளிட்டவை எதிர்த்து நெல்லை குவாரிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா – இணையத்தில் நுழைவுச்சீட்டு!
மேலும், இவர்கள் தங்கள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வரும் குவாரிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி கூறியுள்ளதாவது, அரசிடம் முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கல் குவாரிகள் செயல்படலாம் என்று அனுமதி வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கல், ஜல்லி, M-Sand உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல தடை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதே போல் குவாரிகளுக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை தமிழக அரசு மறுபரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பின்பு அபராதம் விதிக்கப்பட வேண்டும். இதனை தொடர்ந்து, அபராதம் விதிக்கப்பட்ட கல் குவாரிகளில் மீண்டும் அளவீடு செய்ய வேண்டும். இதில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பின் அபராதம் விதிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல் குவாரிகளுக்கு புதிய நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.