தமிழக காவல் துறையினருக்கு முக்கிய உத்தரவு – டிஜிபி சைலேந்திர பாபு நடவடிக்கை!
தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களில் அதிக அளவில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டு உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களது விவரங்களை காவல்துறையினர் சேகரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதிரடி உத்தரவு:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரமைக்க காவல்துறையினர் ஓயாது உழைத்து வருகின்றனர். இருப்பினும், குற்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. இதனை தடுப்பதற்காகவே பல அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து காவல் துறையினரும் பணிகளை முறையாக செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும், புதிய திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் ஒரு மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனை செய்தவர்கள் இரண்டு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போலவே, சென்னையில் கடந்த மாதம் ஆடிட்டர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டதிலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல வகையான தொழில்கள் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.26,000 வரை சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி குறித்த பெரிய அப்டேட்!
அதிலும், வெளி மாநில ஆட்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டட கான்ட்ராக்டர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் குல்பி, ஐஸ் விற்று தொழில் செய்து வருபவர்கள், உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில நபர்கள் உட்பட அனைவரின் விவரங்களையும் ஜூன் 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.