மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.26,000 வரை சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி குறித்த பெரிய அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால் தற்போது ரூ.18,000 ஆக உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 ஆக உயரும். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊதிய உயர்வு
மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது ஊதிய உயர்வுக்கான ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு குறித்த சில நேர்மறையான செய்திகளை இப்போது பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த ஆதாரங்களின்படி, நாளை (ஜூன்.1) நடைபெறும் முக்கியமான கூட்டத்தின் போது, மத்திய அரசு ஊழியர்களின் குழுக்கள் பொருத்துதல் காரணியை உயர்த்துவதற்கான கட்டாய கோரிக்கையை எடுக்கலாம் என தெரிகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தும் முடிவு மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும். அந்த வகையில், ஃபிட்மென்ட் காரணியில் 3.68 சதவீதம் உயர்வு இருக்கும் என்றும் இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த ஊடக அறிக்கையின்படி, தற்போது அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீத ஃபிட்மென்ட் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.8,000 ஆக உயரும்.
அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும். முன்னதாக ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 லிருந்து 3.68 மடங்கு உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த அரசு ஒப்புதல் அளித்தால், தற்போது ரூ.18,000 ஆக உள்ள குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 ஆக உயரும். மேலும் 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி, குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 எனில் அலவன்ஸ்கள் தவிர்த்து ரூ.46,260 (ரூ. 18,000 X 2.57 = 46,260) சம்பளமாகப் பெறுவார்கள். இதுவே அரசு ஃபிட்மென்ட் காரணியை 3.68 மடங்கு (3.65 x 26,000) உயர்த்தினால் ஊதியம் ரூ.95,680 ஆக உயரும்.