பெண் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – அலுவலக நேரம் உட்பட பல்வேறு அறிவிப்புகள்!

0
பெண் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு - அலுவலக நேரம் உட்பட பல்வேறு அறிவிப்புகள்!
பெண் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு - அலுவலக நேரம் உட்பட பல்வேறு அறிவிப்புகள்!

பெண் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – அலுவலக நேரம் உட்பட பல்வேறு அறிவிப்புகள்!

இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து விட்டாலும் இன்னும் சில இடங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை. அதனால் உத்தர பிரதேச அரசு அனைத்து தொழில் நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் ஊழியர்கள் கவனத்திற்கு

இந்தியாவில் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் உள்ளது. மேலும் பெரும்பாலும் பெண்கள் கிராமப்புறங்களில் தண்ணீர் வசதி, கழிவறை வசதி கூட இல்லாத பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் நாள் முழுவதும் கழிப்பறை வசதி இல்லாத இடங்களில் பெண்கள் வேலை பார்ப்பது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்வர் பெண்களின் நலன் கருதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அறிவிப்பு எந்த இடத்தில், எந்த தொழிற்சாலையில், எந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணாக இருந்தாலும் இந்த அறிவிப்பில் உள்ளவற்றை பின்பற்ற வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்த அறிவிப்பில் பல வகையான விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த அறிவிப்பில்,

1. மாநிலத்தில் பணிக்கு செல்லும் பெண்கள் எழுத்துப்பூர்வமாக முன் அனுமதி இல்லாமல் எந்த பெண் ஊழியரையும் காலை 6 மணிக்கு முன்போ மற்றும் மாலை 7 மணிக்கு பின்போ வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது.

2. அத்துடன் மாலை நேரத்தில் வேலை செய்ய மறுத்தால் அந்த பெண்ணை பணிநீக்கம் செய்யக்கூடாது.

3. மேலும் மாலை 7 மணிக்கு பின்போ அல்லது காலை 6 மணிக்கு முன்போ வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து அலுவலகம் வருவதற்கு போக்குவரத்து வசதியை இலவசமாக ஏற்படுத்தி தர வேண்டும்.

4. அத்துடன் மாலை 7 மணிக்கு பின்போ அல்லது காலை 6 மணிக்கு முன்போ வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும்.

5. இதையடுத்து மாலை 7 மணிக்கு பின்போ அல்லது காலை 6 மணிக்கு முன்போ வேலை செய்யும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

6. பெண்கள் வேலை செய்யும் இடங்களில் கழிவறை, ஓய்வு அறை, உடை மாற்றும் அறை மற்றும் அவர்கள் இடத்தில் விளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!