தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள்:
அரசாங்கம் நல்ல முறையில் செயல்படுவதற்கு மிகப்பெரிய தூணாக இருப்பது அரசு ஊழியர்கள் தான் என்றால் மிகையாகாது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு என்று பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அரசு அலுவலகங்கள் பகுதி நேரமாக செயல்பட்டு வந்தது. மேலும் அலுவலகத்தில் 50% பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
Exams Daily Mobile App Download
தற்போதைய தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கென்றே பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டத்தினை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் நேற்று அரசு ஊழியர்களுக்கு முறையான பணி உயர்வு உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு என்று சில ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். அதாவது அரசு ஊழியர்கள் எந்த ஒரு ஒழுங்கற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது. அவ்வாறு ஈடுபடும் பட்சத்தில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.