சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. வாரத்தின் இறுதி நாளான இன்று நகை விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் கடந்த 2020, 2021 ஆகிய வருடங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் உயர்ந்த தங்கம் விலை தற்போது வரை குறையவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆபரணத் தங்கம் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். இந்த காரணத்தால் உலகம் முழுவதும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. மேலும் தங்கத்தின் மீதான GST வரி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை அடுத்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ.504 உயர்ந்து ரூ.38,920 க்கும் கிராம் ரூ.4,865-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகைய நேரத்தில் நகைப்பிரியர்கள் நகைகள் வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் அரசாணை 101 மற்றும் 108 ரத்து? நிகழப்போகும் புதிய மாற்றங்கள்
இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,760 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4,845-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து, ரூ.63.00-க்கும், ஒரு கிலோ 63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவால் திருமணத்திற்கு நகைகள் வாங்குவோர், பெண்கள், நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.