தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாநில அரசு:
அரசாங்கம் நல்ல முறையில் செயல்படுவதற்கு மிகப்பெரிய தூணாக இருப்பது அரசு ஊழியர்கள் தான் என்றால் மிகையாகாது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, தனது ஊழியர்களுக்கு என்று பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அரசு அலுவலகங்கள் பகுதி நேரமாக செயல்பட்டு வந்தது. மேலும் அலுவலகத்தில் 50% பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
Exams Daily Mobile App Download
தற்போதைய அரசு, அரசு ஊழியர்களுக்கென்றே பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டத்தினை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக அரசு அறிவித்துள்ளது. இதை தவிர கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து தமிழ்நாடு அரசு மூலம் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அக்னிவீர் திட்டத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க செப்டம்பர் 7 கடைசி நாள்!
தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அதாவது குடும்ப நிகழ்ச்சிகளும், குழந்தைகளின் கல்வி தேவைகள் போன்றவற்றிற்கு அவர்களின் ஊதியத்திற்கு ஏற்றவாறு உதவி தொகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான முக்கிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மாநில அரசில் பணிபுரியும் பணியாளர்கள் அவர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மேலும் சில அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.